Friday 13 April 2012

'கொளுத்தும் கோடையே வருக' - வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ் !

இன்று (13.04.2012) சித்திரை பிறந்து விட்டது. கோடை காலம் ஆரம்பமாகி விட்டது. இருக்கின்ற வெயிலிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வீட்டுக்குள்ளேயே இருந்தால் இல்லாத மின்சாரம் வறுத்தெடுக்கும். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் சித்திரை 21ல் துவங்கி வைகாசி 14 வரை 25 நாட்கள் இது நீடிக்க இருக்கிறது. அதாவது மே 4 மாலை 6.36 மணிக்கு துவங்குகிறது.




இந்த நாட்களில் வெயில் மிகக் கடுமையாக இருக்கும். அக்னி நட்சத்திர ஆரம்பநாளும் முடிவு நாளும் எல்லா ஆண்டுகளிலும் ஒன்றுபோலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். கோடையில் நம்மை தாக்கக்கூடிய வெயில், வெம்மை, நாவறட்சி, சரும பிரச்சனை, தோல் சம்பந்தமான பிரச்சனை என பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல வழி முறைகளைக் கையாள வேண்டி இருக்கிறது. 




குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் நீர் சத்துகள் நிறைந்ந ஆகாரங்கள் என பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை சமாளிக்க முடிவதில்லை. இந்த வெயிலிலிருந்து தப்பிக்க இயற்கை முறையில் சில டிப்ஸ்.

    * இளநீர், எலுமிச்சை சாறு, நீர் மோர், பதநீர், நுங்கு, தர்பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றை உட்கொள்ளலாம்.

    * கம்மங்கூழ், முளைவிட்ட தானியங்கள், காய்கறி சாலட், பழங்கள், தேன், நெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக்கொண்டால் எளிதில் ஜீரணமாகும்.

    * கோழி இறைச்சி, கேழ்வரகு, அன்னாசி பழம், மிளகாய் போன்றவற்றையும், ஊறுகாய்,அப்பளம், மற்றும் எண்ணையில் வறுத்த நொறுக்கு தீனிகளை தவிர்க்க வேண்டும்.



    * தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மண்பானையில் வெட்டிவேர், நன்னாரி ஊற வைத்து குடித்தல் நல்லது.

    * பருத்தி மற்றும் வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டும். நைலான், பாலியஸ்டர் ஆடைகளை தவிர்க்க வேண்டும்.

    * சோப்பிற்கு பதிலாக வேப்பிலையையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்த கலவையை உடலில் பூசி குளித்தால், நோய் கிருமிகள் உடலை நெருங்காது.

    * பெண்களுக்கு சருமத்தில் ஏற்ப்படும் கருமையை போக்க, உருளைக் கிழங்கு சாறை பூசி, 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

    * கோடைகாலத்தில் ஏற்ப்படும் தொற்றுநோய், பொடுகு தொல்லைகளிலிருந்து விடுபட வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, ஆரிய பின் குளிக்க வேண்டும்.

    * இரவு தூங்க போகுமுன் சந்தனத்தை மார்பு, கழுத்து, மற்றும் கைகளில் பூசிக்கொண்டால், வியர்வை நாற்றத்திலிருந்து தப்பலாம்.

    * சீத்தளி என்ற மிகமிக எளிதான மூச்சு பயிற்சியை தினமும் இருவேளை செய்து வந்தால், உடலை ஜில்லென வைத்துக்கொள்ளலாம்.




கோடைத் தொல்லைகளை வெல்வதற்கு வெள்ளரி பிஞ்சுகளும் உறுதுணையாக இருக்கின்றது. சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் கொண்டது வெள்ளரிக்காய்.

வெள்ளரியில் உள்ள சத்துக்கள்:

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை அடங்கியுள்ளது .

No comments:

Post a Comment